அவ பள்ளிக்கூடம் வரல
அது பரவால்ல
ஆனா காரணம் தெரியல
வயித்துவலின்னாய்ங்க,
என்னத்த தின்னாளோ?
ஒருவாரம் காணோம்!
உக்காந்துட்டாளாம்.
கால்வலினு சொல்லலியே!?
ஒருத்தருமே சொல்லல,
என்னாவோ புரியல.
வந்தா ஒருநா
என்னை அறியாம என் புருவம் கேட்டது 'என்ன? '
அவளையே அறியாம
சிரிச்சுட்டு போய்ட்டா..
அந்த சிரிப்புல
என்னவோ புரிஞ்சுது..!
ஓ இதுதான்
அறியாப்பருவமா?!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக