வியாழன், 18 பிப்ரவரி, 2016

வரவேற்பு



விமர்சனமில்லா பார்வை வேண்டி
வரம் கேட்டபடி உள் நுழைய,
நகை பட்டொடு
நகைத்திருந்த பெண்கள்.
வெள்ளை உடையில்
சுமங்கலியாய் ஆண்கள்.
குழைந்தையின் பசி பேசும்
அழகை இழக்காத இளம்தாய்கள்.
சுருக்கம் விழுந்த பாட்டி மடியில்
சிரித்து விழும் பேத்திகள்.
மணமக்கள் முகத்தில்
வெட்கத்தை தேடி ரசித்தப்படி நான்.
என் மகள் காதில் மெதுவாக
'பொண்ணு அழகா இருக்கு' என்றாள் .
நான் சொல்ல அங்கில்லை ஒரு காது!
கல்யாணம் எப்போதும் அழகே....




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக