நல்லவனுக்கு நாளை மரணம் .
கெட்டவன் உயிர்புகும் தருணம் .
சீக்ரெட்டாய் உன்னை
சீக்கிரமாய் அணைக்க நினைத்தவன்
சிகரெட்டாய் அணைப்பான்.
குடித்தனம் உன்னோடு இல்லை,
குடி தினம் உண்டு .
கலைந்தது கனவு - இனி
களைத்திருக்கும் அவன் கண்கள் ,
கலைந்தே இருக்கும் தலை.
தடவி தடவி திரிந்தான்
தடவமுடியாமல்
தடம்மாறி போனதால்...
கிறுக்கினான்
கிறுக்கனாய்.
கெட்டவன் சட்டென முடிய
நல்லவன் நாளை பிறக்கிறான் ...
சிவப்பிற்கு சிரிப்பிற்கு
மட்டுமல்ல ,
சிறப்பிற்கும் சிநேகிதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக