ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

கோட்டை கட்டு



நல்லவனுக்கு நாளை மரணம் .
கெட்டவன் உயிர்புகும் தருணம் .

சீக்ரெட்டாய் உன்னை
சீக்கிரமாய் அணைக்க நினைத்தவன்
சிகரெட்டாய்  அணைப்பான்.

குடித்தனம் உன்னோடு இல்லை,
குடி தினம் உண்டு .

கலைந்தது கனவு - இனி
களைத்திருக்கும் அவன்  கண்கள் ,
கலைந்தே இருக்கும் தலை.

தடவி தடவி திரிந்தான்
தடவமுடியாமல்
தடம்மாறி போனதால்...

கிறுக்கினான்
கிறுக்கனாய்.

கெட்டவன் சட்டென முடிய
நல்லவன் நாளை பிறக்கிறான் ...

 சிவப்பிற்கு சிரிப்பிற்கு
 மட்டுமல்ல ,
சிறப்பிற்கும் சிநேகிதன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக