கோதுமை நிற
மங்கையே !
தினையில்
கோர்த்த தேனே !
மயக்கும் விழி
திறந்து - தீரனை
கோழையாக்கும்
மன்மத
திலகமே ..
கோடையிலே அன்பு
மழையில்
தினமும் நனைத்தவளே !
கோழிகறியோ
மட்டனோ - சுவையுடன்
திண்ண சமைத்தவளே !
கோபப்படுவாய்
மன்னிப்பாய்
திரும்பப் பேசுவாய் ...
கோர முகத்துடன்
மவுனமாவாய்
திருந்தி சிரிப்பாய் ...
கோபம் குறை .
மவுனம் களை .
திருந்த நீ மறுத்தால்
கோப்பையில்
மதுவுடன்
திரிவேன் .
கோபியரின்
மடியினில்
திணிவேன் -
கோர
மரணம் வேண்டி
தினம் தொழுவேன் ..
கோபம்
மறந்து - நீ
திரும்பும் வரை - மூச்சிருக்கும் !!!
கோ
ம
தி .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக