சிரித்துச் செல்கையில்
சிறைபட்டது தெரியவில்லை.
விலகிச் சென்றபின்
விலங்கிருந்தது கையில்,
விளங்காமல் நான்.
புல்லில் பனித்துளியாய்
புன்னகைத்து சென்றவள்.
விரல் நடுவில் சொருகிவிட்டாள்
விவாக பத்திரிக்கை - மீண்டும்
விளங்காமல் நான்..
நிலத்தில் நின்றுகொண்டு
நிலாவை பார்த்திருந்தேன்.
பயணத்தில் உடன்வர ,
பக்கத்தில் வருமென - இன்னும்
விளங்காமல் நான்..
அப்பா !
அடிக்கடி அடிக்கு அடி
நீங்க சொல்லுவீ ங்களே ...
'' நீ விளங்காமல் போவாய்'' னு - அதுதானா ?
விளங்காமல் நான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக