சனி, 20 பிப்ரவரி, 2016

உனக்கு எப்படி புரியும் என் காதல்





நீ கண் சிமிட்டும்
நேரம் போதும்
காதல் வர ..
கன நேரம்தான்
பற்றிக்கொள்ள ..


நீ வந்தபின்தான்
என்னால் கவிதை
எழுத முடிந்தது.


நீ கண் மூடினாலே
என் உலகம் இருண்டது ..
இருந்தபோது
இன்னும் வெளிச்சமாய்
இருந்தது.

நீ ஏன்
வெள்ளையாய் இருக்கிறாய்.
நான் மட்டும் கருப்பாய் ?

நீ  நான்
படிக்கும்போதே  தேவைப்பட்டாய்.
தூங்கும்போதெல்லாம்
யாராலோ அணைக்கப்பட்டாய்.


  நீ என்
 காதலை புரிந்துகொள்ள
     முடியாத
     TUBE LIGHT .






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக